தற்போது ஏற்பட்டுள் கொவிட் நெருக்கடியைவிட வருங்காலத்தில் ஏற்படும் பெருந்தொற்றுகள் மிகக் கொடியதாக இருக்கலாம் என ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை உருவாக்கியவர்களில் ஒருவரான பேராசிரியர் டாம் சாரா கில்பெர்ட் எச்சரித்துள்ளார்.
மறைந்த ஊடகவியலாளர் மற்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரிச்சர்ட் டிம்பிள்பி 44 ஆவது நினைவு பேருரையில் பேசும்போதே அவா் இவ்வாறு எச்சரித்தாா்.
எதிர்காலங்களில் பெருந்தொற்றால் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க அதிக நிதி தேவைப்படும் எனவும் அவா் கூறினார்.
ஒமிக்ரோன் கொரோனா திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் கொண்டதாகவே இருக்கும் எனவும் பேராசிரியர் டேம் சாரா கில்பெர்ட் எச்சரிக்கை விடுத்தார். எனவே, ஒமிக்ரோன் திரிபு குறித்து மேலதிக ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
ஒரு வைரஸ் நம் உயிரையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவது இது கடைசியாக இருக்காது. அடுத்து வரும் இன்னொரு வைரஸ் இன்னும் மோசமானதாக இருக்கக்கூடும். அது அதிகம் பரவக்கூடியதாகவோ அல்லது கொடியதாகவோ அல்லது இரண்டுமாகவோ இருக்கக்கூடும் எனவும் அவா் குறிப்பிட்டார்.
சீனாவில் கொரோனா பரவல் ஆரம்பமான நிலையில் 2020 தொடக்கத்திலேயே கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க தொடங்கியதற்காக இங்கிலாந்து ராணியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்படும் கௌரவப் பட்டத்தைப் பெற்றதன் மூலம் பேராசிரியர் டாம் சாரா கில்பெர்ட் புகழ்பெற்றார்.
இவரும் இணைந்து உருவாக்கிய ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி உலகில் 170-க்கு அதிகமான நாடுகளில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இங்கிலாந்து